
நாகை மாவட்டம் கடம்பங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிங்காரவேல் – முத்துலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஹேமலதா (26), பவித்திரா (24), ஐஸ்வர்யா (23), பிரகதி (22) ஆகிய 4 மகள்கள் உள்ளனர். முதலில் 2 சிறுமிகளுக்கு வீட்டின் சம்மதத்துடன் திருமணம் நடந்த நிலையில், மற்ற 2 பெண்களும் காதல் திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
இதனால் சில ஆண்டுகளாக மனைவி முத்துலட்சுமியிடம், கோவாவில் இருந்து வந்த கணவர் சிங்காரவேலு தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவியை கொடுமைப்படுத்தினார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் குடிபோதையில் வந்த சிங்காரவேலு, மனைவி முத்துலட்சுமியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
என் மகள்கள் ஓடிப்போனதற்கு நீ தான் காரணம் என்று கூறி சிங்காரவேலு, முத்துலட்சுமியின் தலையில் கட்டையால் தாக்கி கொலை செய்தார். நாகூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிங்காரவேலுவை கைது செய்து முத்துலட்சுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.